Sunday, May 19, 2024
-- Advertisement--

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்….!!! போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு.

நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தன. மேலும் வழிகாட்டு நெறிமுறைகள் கூட வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரக்கூடிய செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி போக்குவரத்து துறையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது அதில பேருந்தில் இலவசமாக பயணிக்க கூடிய மாணவர்கள் பள்ளியின் அடையாள அட்டை அல்லது பள்ளி சீருடையில் பயணிக்கும் போது அவர்கள் இலவசமாக பயணிக்கலாம்.

அதேபோன்று கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி, ஐஐடி மாணவர்களும் அவர்களுடைய அடையாள அட்டை அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles