கொரோனா கிருமி பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள தமிழக அரசு பாடத்திட்டத்திற்கான பள்ளி மாணவர்களுக்கு தேர்வுயின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மற்றும் 12 வகுப்பு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாக நிலையிலும் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதில் அனைத்து வகுப்புகளுக்கும் ரிசல்ட்டுகள் வந்துவிட்ட நிலையில் அட்மிஷன் பணிகள் குறித்து முக்கிய அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 1 மற்றும் 6 மற்றும் 9 ஆம் தேதி வகுப்புகளை தொடங்க இருப்பதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்