Thursday, May 2, 2024
-- Advertisement--

ஜானகி போல் பெருந்தன்மையோடு சசிகலா கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கு அதை ஏற்க முடியாது எந்த உரிமையும் இல்லாத அவர் தனது காரில் திமுக கொடியை பயன்படுத்துவது தேவையற்ற நடவடிக்கை. ஜானகி போல் பெருந்தன்மையோடு அவர் கட்சியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மதியம் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது எந்த உரிமையும் இல்லாத அவர் அதிமுக கொடியை கட்டுவது தேவையற்ற நடவடிக்கையை.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சந்திக்க சசிகலா சென்றதை அதிமுக விமர்சிக்க விரும்பவில்லை. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி விஎன்.ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமைகே விட்டுக் கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும் மாறாக தடையாக இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles