சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகை 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை 2020ஆம் ஆண்டு செலுத்தினார். தண்டனை காலம் முடிவடைந்தது வருகின்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.
சசிகலா சிறையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபின் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அப்பொழுது கொரோனா இல்லை என்று முடிவு வந்தது.
ஒரு சில ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் சசிகலாவை வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது அப்பொழுது சசிகலாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
27ஆம் தேதி சசிகலா வெளியில் வருவது சாத்தியமா என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிடிவி தினகரன் அவர்கள் நம் அனைவருடைய எதிர்பார்ப்பும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27 1 2021 அன்று விடுதலை ஆகிறார் என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து சின்னம்மாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் ஆலோசனை பெற்று பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார்.
தியாகத் தலைவி சின்னம்மா விடுதலை ஆகிறார் என்று தினகரன் போட்ட வீட்டுக்கு பலர் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அப்படி என்ன தியாகம் செஞ்சாங்க என்று கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும் என்று தினகரனை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது ஒரு புறமிருக்க மற்றொரு பக்கம் நாளைய தமிழகமே வருக என்று சசிகலாவை புகழ்ந்து வருகின்றனர் தினகரன் கோஷ்டிகள்.