சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் அவர் ஆயிரம் பேரிடம் போனில் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்த ஊரில் அதிமுக ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.
சசிகலா அதிமுகவில் இல்லை இதை நான் ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டேன் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் இதை பெரிது படுத்துகிறார்கள். அந்த அம்மா எனக்கு ஒன்றை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.அதிமுகவுக்கும் அந்த அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் அதிமுக உறுப்பினர் கிடையாது.
அதனால் அவர் பத்து பேரிடம் மட்டும் அல்ல ஆயிரம் பேரிடம் போனில் பேசினாலும் அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. விழுப்புரத்தில் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் டிடிவி தினகரனை ஜெயிக்க வைக்க வக்கில்லை. இவங்க வந்து அதிமுகவுக்கு வர போறாங்களா? சசிகலா என்பவர் யார்? அம்மா வீட்டில் வேலை செய்து வந்த உதவியாளர் அம்மாவும் இல்லை. அதோடு அவர் வேலையும் முடிந்து விட்டது என்றார்.