அதிமுக பொன் விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என கல்வெட்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைச்சாலையிலிருந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையாகி வெளியே வந்தார். பிறகு அதிமுகவை சசிகலா பொறுப்பை ஏற்றுக்கொண்டு வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக திடீர் அறிவிப்பு தந்தார். இருப்பினும் சசிகலா அவ்வப்போது தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடி வருகிறார். இதை தொடர்ந்து அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார் என செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து இன்று அதிமுகவின் போன் விழாவையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நினைவிடத்தில் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதோடு எம்ஜிஆர் ஜெயலலிதா திருஉருவ படங்களுக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனிடையே நினைவு இல்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றத்துடன் நிகழ்வை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு திறந்து வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் எம்ஜிஆர் இணையதளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கொடியேற்றத்துடன் பிஜே சசிகலா பொதுச் செயலாளர் அண்ணன் கல்வெட்டு வைத்து அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.