பிரபல நடிகர் சரத்குமார் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சரத்குமார் அவர்கள் நடிகை தேவயானி அவர்களுடன் சேர்ந்து சில படங்கள் நடித்து உள்ளார் அப்பொழுது ஏற்பட்ட பழக்கத்தில் நடிகை தேவயானியை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார் சரத்குமார்.
தேவயானியை திருமணம் செய்ய முடிவு செய்த சரத்குமார் தேவயானியின் அம்மாவிடம் நேரடியாக சென்று தேவயானி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆனால் தேவயானியின் அம்மா மறுத்துவிட்டாராம் காரணம் சரத்குமார் ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகள் பெற்று டிரைவர்ஸ் ஆனவர் அதனால் தேவயானியை சரத்குமாருக்கு திருமணம்செய்து கொடுக்க மறுத்து விட்டாராம்.
அதன்பின் தல அஜித் அவர்களின் முன்னாள் காதலியான ஹீராவை காதலித்து வந்தாராம். ஹீரா திட்டவட்டமாக செட் ஆகாது என்று கூறிவிட்டாராம்.
அந்த நேரத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நக்மா அவர்கள் மீது சரத்குமாருக்கு ஒரு கிரேஸ் இருந்ததாம் நக்மாவிற்காக கொட்டிவாக்கத்தில் ஒரு பங்களா ஒன்றையும் வாங்கி கொடுத்தாராம். நக்மாவிற்காக வெளிநாட்டில் ஒரு படமும் எடுத்தாராம் சரத்குமார்.
குதிரை ஓட்டிய சரத்குமார் குதிரைக்கு ஓனர் ஆகவில்லை என்று இந்த தகவலை வெளியில் கூறியவர் திரை உலகில் நெருக்கமான மற்றும் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.