Wednesday, May 22, 2024
-- Advertisement--

ஜெய்ராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்பிற்கு நியாயம் கேட்டு இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி.

ஜெய்ராஜ் வயது (58 ) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் வயது (31) இவர்கள் இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். கடையை மூட சொல்லி போலீசார் மற்றும் ஜெய்ராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஜெய்ராஜை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.

அவரது மகனும் தந்தையை எப்படி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லலாம் என்று மகன் வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக தகவல் வந்தது. இருவரையும் விசாரணை செய்து கஸ்டடியில் வைத்து இருந்ததாகவும் அடுத்த நாள் இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உயிர் இழந்ததாக செய்திகள் வந்தது. ஆனால் தனத்தை மற்றும் மகன் எப்படி ஒரே நேரத்தில் உடல் நிலை சரி இல்லமால் உயிர் இழப்பார்கள் என்று குழப்பம் நீடித்தது.

அதன் பிறகு வந்த தகவலின் படி அதிகாரிகள் ஜெய்ராஜை தாக்கியதாகவும் அவரையும் அவர் மகனையும் அடித்து துன்புறுத்தியதாக தகவல்கள் கசிந்தது. அது மட்டும் அல்லாமல் ஆசனவாயில் லத்தியை வைத்து அடித்து துன்புறுத்தியதாக செய்திகள் வந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி மேல் புகார் அளித்து போராட்டத்தில் இறங்கினார்கள். இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

தற்பொழுது பிக்பாஸ் புகழ் தர்சனின் முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டி இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்ததை SCREENSHOT எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார் மற்றும் புகார் அளிப்பதற்காக இணையதளத்தின் லிங்கை கொடுத்து உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles