தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகசைதன்யா. இவர் நாகார்ஜுனின் மூத்த மகனாவார். இவர் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் உள்ளார். அவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் மட்டுமே நிலைத்தது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்தநிலையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் கல்யாண பெண் நடிகையாக இருக்கக்கூடாது என நாகசைதன்யா பெற்றோரிடம் கண்டிஷன் போட்டு உள்ளார். அதற்கு பெற்றோர்கள் ஓகே சொல்லி புதியதாக பெண் பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.
விரைவில் நாகசைதன்யா திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புதியதாக பார்த்துள்ள பெண் யார் என்பது தெரியவில்லை விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.