Saturday, April 27, 2024
-- Advertisement--

சமந்தாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய கிப்ட்…!!! என்னனு தெரியுமா.. வியப்பில் சமந்தா..

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அது மட்டுமில்லாமல் தமிழில் நன்றாக பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. விஜய் ,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த சமந்தா திருமணத்திற்கு பின்பும் தனது மார்க்கெட் இழக்காமல் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார்.

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சமந்தாவும் நாக சைத்தன்யாவும் விவாகரத்து பெற்றுக் கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

தற்போது அவருக்கு உடல்நல பிரச்சினையால் சினிமாவில் நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் ஆதரவு இன்றளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் குண்டூர் அடுத்த பாபட்லாமாவட்டத்தில் ஆலப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திப். இவர் சமந்தாவுக்கு கோயில் கட்டி இருக்கிறார்.

நாளை இந்த கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இத்தகைய அன்பை ரசிகர்களிடம் பெற்றவர் ஒரு சிலரே அதில் குஷ்பூ, நமிதா, நயன்தாரா, நிதி அகர்வால் போன்ற நடிகைகளுக்கு மட்டுமே கோயில் கட்டிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்த நிலையில் நாளை ஏப்ரல் 28 ஆம் தேதி சமந்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் சந்திப் கோவிலை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கோவில் பற்றி சந்திப் கூறியதாவது எங்கள் சமந்தா பிரத்யூஸா அறக்கட்டளை சார்பாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலப் பணிகள் தன்னை மிகவும் கவர்ந்ததால், அவருடைய ரசிகை ஆனதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles