சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவே கொண்டாடிய நடிகை.சமீபத்தில் தான் விஜய் தேவர்கொண்டா சமந்தாவின் குஷி திரைப்படம் வெளியானது. படம் பெரிய ஹிட் படமாக அமையாவிட்டாலும் டீசென்ட் ஆன படமாக இருந்ததது.
சமந்தா சில வருடங்களாக மயோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். ஒரு நல்ல நடிகை அதுவும் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டிய நடிகைக்கு இப்படி ஒரு நோய் வந்தது சினிமா வற்றத்தினர் மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் ஒரு பெரிய வருத்தமே.
மயோசிட்டிஸ் நோயின் தாக்கத்தினால் தவித்து வரும் சமந்தா தினமும் அதனை எதிர்த்து போராடி வருகிறார். சில மாதங்களுக்கு முன் நடந்த குஷி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அவருடைய இறுகிய முகம் பார்க்கவே கஷ்டமாக இருந்தது ரசிகர்களுக்கு. அவர்க்கு கண்ணில் ஒளி பட்டால் தலை வலிக்கும் அதனால் கண்ணாடி அணிந்து கொண்டு சமாளித்தார். எதோ ஒன்றை துழைத்தது போல முகம் இருந்தது. குஷி படத்தில் கூட சில இடங்களில் சமந்தா அழகாக தெரிந்தாலும் பல இடங்களில் முகமே மாறியது போல தெரிந்தது. தற்பொழுது உள்ள நிலைமையில் டப்பிங் பேச முடியாது என்று நினைத்த சமந்தா சின்மயி அவர்களை பேச வைத்தார்.
பல இடங்களில் ரசிகர்களை பார்த்தால் விரைவில் மீண்டு வருவேன் என்று ரசிகர்களுக்கு தைரியம் கூறிவிட்டு செல்வார். வெளியிடங்களுக்கு சென்று நல்ல இயற்கை காற்றை சுவாசிப்பது, யோகா செய்வது என்று தனது நாட்களை களைத்து வருகிறார் சமந்தா. பல கோடிகள் கொட்டி மருத்துவம் பார்த்து வரும் சமந்தா போராடி வருவதாக தகவல்.
திருமண வாழ்வில் போராட்டங்களை சந்தித்த சமந்தா தற்பொழுது உடல்நலத்தில் போராட்டத்தை சந்தித்து வருவது சற்று வருத்தமே.
தான் காதலித்து திருமணம் செய்த chay (நாகசைதன்யா) பெயரை தனது இடுப்பில் பச்சை குத்தவைத்து இருந்தார் சமந்தா. பல பேட்டிகளில் தனது காதல் கணவர் பெயர் ஆசை ஆசையாக குத்தியது என்று தெரிவித்து இருந்தார். தற்பொழுது விவாகரத்துக்கு பின் முதல் முதலாக அந்த பெயரை அளித்து உள்ளார். இது சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் தெளிவாக தெரிந்து உள்ளது.