சமந்தா சமீபத்தில் தான் தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா இருவருக்கும் இதையே சில ஈகோ பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கள் ஏற்பட்டதால் இவர்களுடைய காதல் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பின் நான் நன்றாக இருக்கிறேன் அதுபோல் சமந்தாவும் நன்றாக இருப்பார் என்று கேஷுவலாக பேட்டி கொடுத்து வந்தார் சமந்தாவும் விவாகரத்து என்பது கடினமான ஒன்று அதைப்பற்றி தற்போது பேச விரும்பவில்லை என்று தெரிவித்து வந்தார்.
தற்பொழுது நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அதே படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். கமல்தாஸ் கதீஜா என்ற கதாபாத்திரத்திலும் நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு.
சமந்தா சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார் அப்பொழுத ரசிகர்கள் உங்களுடைய முதல் சம்பளத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு என்னுடைய முதல் சம்பளம் 500 ரூபாய் 8 மணி நேரம் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிந்தேன் அப்போது நான் பத்தாம் வகுப்பு அல்லது 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று தெரிவித்திருந்தார்.