Saturday, May 18, 2024
-- Advertisement--

சமந்தாவின் அணிந்திருந்த Tshirt வாசகத்தால் சர்ச்சை…!!! விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்.

சமந்தாவும் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவும் சமீபத்தில் தான் சில கருத்து வேறுபாடுகள் காரணத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன்பின் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்ட சமந்தா இமயமலைக்கு சென்று ஓய்வெடுத்து வந்தார். எங்களின் விவாகரத்தை பற்றி பேசாதீர்கள் இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சமந்தா தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து நடித்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் டீசர் இந்த மாதம் 11ஆம் தேதி வெளியிட உள்ளார்கள். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் மற்றும் ஹாலிவுட் தொடர்களிலும் கமிட்டாகி உள்ள சமந்தா படு பிஸியாக இருக்கிறார்.

SAMANTHA kAATHU VAAKULA RENDU KADHAL

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் கூட ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். ஐட்டம் சாங்கில் எந்த அளவுக்கு இறங்கி ஆட முடியுமோ அந்த அளவுக்கு நடன அசைவுகளை கொடுத்து ஆடி இருந்தார் சமந்தா. அந்தப் பாடலும் பெரிய ஹிட் பாடலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது ஆனால் அந்தப் பாடலில் ஆண்களைப் பற்றி தவறாக கூறும் வரிகள் உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பியது.

இது ஒருபுறமிருக்க சமந்தா தற்போது மும்பையில் உள்ள சலூன் ஒன்றில் இருந்து வெளியில் வரும் புகைப்படத்தை இணையத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் சமந்தா அணிந்திருந்த டீசர்ட்டில் வாசகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தற்பொழுது சமந்தாவின் டீசர்ட்டில் எழுதியிருக்கும் வாசகத்தின் மீது தான் சோசியல் மீடியாவில் அனைவர் கண்ணும். ஒரு முன்னணி நடிகை தனக்கு பிடித்த உடைகளை அணிவது தவறல்ல ஆனால் அவர்கள் அணியும் உடையில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை கவனிக்க வேண்டாமா என்று கூறிவருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles