சமந்தா தற்பொழுது கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட்டிலும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் விஷயம் சமந்தா நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து பற்றி தான். நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் இவர்கள் பிரபலமானவர்கள் என்பதினால் இவர்களின் விவாகரத்து பெரிதாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் புரிதல் இல்லாமல் பிரிந்ததற்கு பல காரணங்கள் மீடியாக்களில் வெளிவந்துகொண்டிருக்கிறது சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சமந்தாவின் விவாகரத்து பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளாமல் கருக்கலைப்பு செய்ததால் நாகசைதன்யா அவர்களின் தந்தை நாகார்ஜுனா அவர்களுக்கு வருத்தம் என்றும், ஒரு சில படங்களில் சமந்தா ஆபாசமாக நடிப்பது பற்றி நாகசைதன்யா குடும்பத்திற்கு சிலர் போட்டு கொடுத்ததாகவும், அதனால் சினிமாவில் நடிப்பதை கணவர் நாக சைதன்யா குடும்பத்தினர் நிறுத்த சொல்லியதாகவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சாமர்த்தியமாக தனது கணவர் பெயரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு விலை கொடுத்து வாங்கி விட்டதாக சமந்தாவை குறிப்பிட்டிருந்தார். இந்த செய்திகள் இணையத்தில் வலம் வர சமந்தா கவனத்திற்கும் இந்த செய்திகள் சென்றுள்ளது இதனைப் பார்த்த சமந்தா உடனே போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் அதில் தனக்கு மற்றவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தான் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளில் இருந்து என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி சந்தர்ப்பவாதி என்று கூறிவருகிறார்கள் விவாகரத்து என்பது மிகவும் வேதனையான ஒன்று அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வதந்திகள் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வேன் உடைந்து விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விவாகரத்து பெற்ற வேதனையில் இருக்கும் சமந்தாவைப் பற்றி ஆளாளுக்கு அள்ளி விடுவது சமந்தாவை பெரிய வேதனையாக்கி உள்ளது என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தினர்.