சமந்தா சென்னை பல்லவாரத்து பெண் இவருடைய தந்தை தெலுங்கு பேசுபவர் , தாயார் மலையாளி. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் டிகிரியை முடித்தார். அதன் பின் தமிழ் சினிமாவிற்கு “பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு பெரிய மார்க்கெட் இருந்தது.
கவுதம் மேனன் இயக்கிய “விண்ணைத்தாண்டி வருவா” என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் வருவார். அந்த படத்தின் தெலுங்கு வெர்சனில் பிரபல நடிகர் நாகஅர்ஜுன் , நடிகை அமலாவின் மகன் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. இந்த படத்தின் மூலம் நாகசைதன்யா சமந்தா இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அதன் பின் நாகசைதன்யா, அவருடைய தந்தை நாகஅர்ஜுன் , சமந்தா மூவரும் “மனம்” என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். சமந்தா – நாக சைதன்யா திருமணம் 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் சிறப்பாக நடந்தது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் சமந்தாவின் மாமியாரான பிரபல நடிகை அமலாவிடம் மருமகள் சமந்தா வீட்டில் சமைத்து தருகிறாரா என்று கேட்டதற்கு “நோ” என்று ஒரு வார்த்தையில் சொன்னார். ஏன் சமைக்க வேண்டும் சமைக்க ஆட்கள் இருக்கிறர்கள் என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் வீட்டில் சமைப்பது எனது கணவர் நாகார்ஜுன் தான். அவர் தான் பெரிய cook . நான் அனைத்து சமையல் சாமான்களை வாங்கி வைத்துவிடுவேன். அவர் ஓய்வு நேரத்தில் எதாவது பாடல்களை கேட்டு கொண்டு சமைத்து எங்களை அசத்துவார் என்று அமலா புன்னகையுடன் கூறி இருந்தார்.