சமந்தா பல்லாவரத்தை பொண்ணு தமிழ் சினிமாவிற்கு நடிகர் முரளியின் மகன் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் கமிட்டானார். தமிழில் படங்கள் நடிப்பது போல தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கினார் அப்போது நடிகர் சித்தார்த் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
சமந்தா திடீரென்று சித்தார்த்தை பிரிந்தார். தன் காதல் தோல்விக்குப் பிறகு படங்களில் படிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்த சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து அதிக அளவில் ரசிகர்களை கொண்டார். தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா தெலுங்கில் நாக அர்ஜுன் அமலா அவர்களின் மகன் நாகசைதன்யா என்பவரை காதலித்து வந்தார்.
நாகசைதன்யா சமந்தா மற்றும் நாகர்ஜுனா மூவரும் சேர்ந்து மனம் என்ற தெலுங்கு படத்தில் ஒன்றாக நடித்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டால் சமந்தா. அடிக்கடி வெளிநாடுகள் ஜோடியாக சுற்றி வந்து புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
தற்பொழுது தனது காதல் கணவர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். தற்பொழுது நடிகர் நடிகைகளுக்கு பிடித்த இடம் மாலத்தீவு தான். அங்கு உள்ள ரிசார்ட்டில் ரூம் எடுத்து ஜாலியாக பொழுதை கழிப்பது மற்றும் அங்குள்ள கடற்கரையில் சுதந்திரமாக வலம் வருவது என்று ஓய்வு நேரத்தை மாலத்தீவில் செலவிடுவார்கள்.
தனது கணவனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்ற சமந்தா சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் அதில் ஒரு சில புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் இங்க வந்த புயல் மாலத்தீவில் வந்திருக்க கூடாதா என்று கலாய்த்து வருகிறார்கள் .