தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் பல்லாவரத்தில் தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே.சமந்தாவின் பூர்வீகம் தமிழ் என்றாலும் அவர் அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி படங்களில் நடித்துள்ள சமந்தா வெப் சீரிஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர் நடித்த பேமிலி மேன் சீரியஸ் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு சமந்தா மையோ சிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து சமந்தா மீண்டும் ஒர்க்அவுட் செய்வது படப்பிடிப்பில் கலந்து கொள்வது என பிசியாக இருந்து வருகிறார்.
தற்பொழுது ஹிந்தி வெப் சீரியஸான சிட்டாடல் என்ற வெப் சீரியஸில் நடித்து வருகிறார். பொதுவாக சமந்தா படத்தில் வரும் ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் அவரே டூப் போடாமல் நடிப்பது வழக்கம். அதுபோல இந்த வெப்சிரிசிலும் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன.
அதில் அவர் டூப் போடாமல் நடித்துள்ளபோது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு சண்டை போட்டதனால் வந்த காயம் என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்து இவ்வளவு கஷ்டம் தேவையா என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.