சிவராத்திரி என்றால் சத்குருவின் ஈஷாவில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படும். இரவு முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் விடிய விடிய நடக்கும் இதனை பார்ப்பதற்காக உலகமெங்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
பெரிய மாநாட்டை போல நடக்கும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மிகக் குறைந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அதில் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஒரு இருக்கைக்கு மற்றொரு இருக்கும் இடைவெளி விட்டு அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
சிவராத்திரியின் பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளில் சத்குரு நடனம் ஆடுவது வழக்கம் அந்தவகையில் சிவராத்திரி அன்று சத்குரு நடனமாடினார் அதனை பக்தர்கள் பார்ப்பதற்காக ஒரு சில தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியன்று நடிகர் நடிகைகள் வருவார்கள். குறிப்பாக காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா என அனைத்து முன்னணி நடிகைகள் ஈஷா மையத்திற்கு அடிக்கடி வருவது வழக்கம் அதுபோல சிவராத்திரி அன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளித்து வந்தனர்.
தமன்னாவிற்கு சமீபத்தில் கூட நான் வந்து சிகிச்சை எடுத்து தற்பொழுது தான் நன்றாக இருக்கிறார் மீண்டும் கூட்டங்கள் அலைமோதும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டாம் என்று நினைத்தாரோ என்னமோ அவர் வரவில்லை.
காஜல் அகர்வால் தனது கணவருடன் நிகழ்ச்சி நடக்கும் பிரம்மாண்ட சிவன் சிலையை அருகில் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டார்.
பக்தர்கள் ஒரு பக்கம் நடனமாடிக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா அமைதியாக அமர்ந்து தியான நிலையில் இருந்தார். தியானம் மட்டுமே மன அமைதியைக் கொடுக்கிறது என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே சமந்தா ஈஷா யோகா மையத்திற்கு சென்று யோகா மற்றும் தியானங்களை கற்று வருவரும் புகைப்படங்கள் வெளியானது.
தற்பொழுது சமந்தா தியானம் செய்யும் புகைப்படத்தை அவரே வெளியிட்டு உள்ளார். சத்குருவின் தீவிர ரசிகை ஆகிவிட்டார் என்று சீனி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.