சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தமிழ் மட்டும் இல்லை தெலுங்கு சினிமாவிலும் பெரிய இடத்தையும் ரசிகர்களையும் வைத்து உள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தில உள்ளார்.
சமந்தா சென்னையில் உள்ள பல்லவரத்தை சேர்ந்தவர். இவருக்கும் அமலா- நாகஅர்ஜுன் அவர்களின் மகன் நடிகர் நாகசைதன்யாயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் ஊர் சுற்றி அதனை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் புகைப்படமாக வெளியிட்டு வந்தார் சமந்தா. ஆனால் சில மாதங்களாக அவர் புகைப்படங்கள் பதிவிடுவாமல் இருந்தார். சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் புகைப்படங்கள் ஏதும் வெளியிடாமல் இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் சமந்தா. அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தூக்கம் என்று போட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் தனது செல்ல பிராணியாக ஒரு நாயினை கட்டிபிடித்து கொண்டு தூங்குவது போல இருந்தார். இதோ அந்த புகைப்படம்.
ஆனால் இந்த புகைப்படத்தில் தனது முகத்தை காட்டவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். எப்படியோ குட்டி சமந்தா வந்தாலும் சந்தோசம் தான்.