பிரபல நடிகை சமந்தா தனது கணவரை விட்டு பிரிந்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் இருந்து சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று ஆளுக்கு ஆள் விவாதிக்க ஆரம்பித்துவட்டனர்.
சமந்தாவிற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதால் இந்த திடீர் முடிவு குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சென்னை பல்லவராது பொண்ணு ஆந்திராவிற்கு மருமகளாக போன போது எப்படி ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் சந்தோஷப்பட்டார்களோ அந்த அளவிற்கு தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களாக மீடியாவில் சமந்தா நாக சைதன்யா இருவரும் விவாகரத்து வாங்க போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது ஆனால் இதற்கு எந்த ஒரு மறுப்பு தெரிவிக்காத சமந்தா தரப்பு தற்பொழுது இருவரும் பெரிய பிரியப்போவதாக பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
சமந்தாவின் திடீர் பிரிவுக்கு காரணம் என்ன என்பதை ரசிகர்கள் மீடியாக்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள் இந்நிலையில் நடிகை குஷ்பூ அவர்கள் “ஒரு ஜோடிக்கு இடையே என்ன நடக்கிறது, அவர்களுக்கு இடையே உள்ளது. அவர்கள் இருவரும் பிரிந்ததற்கான உண்மையான காரணம், இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மனிதனாக நாம் என்ன செய்ய முடியும் என்பது அவர்களின் தனியுரிமையை மதிக்கவும் மேலும் நிலைமையை மேலும் புரிந்துகொள்ள அவர்களுக்கு இடமளிக்கவும் ஆகும். யூகித்து நிறுத்துங்கள், முடிவுகளுக்கு வருவதை நிறுத்துங்கள்” என்று ட்வீட் ஒன்றை போடு உள்ளார்.