Sunday, May 5, 2024
-- Advertisement--

விவகாரத்திற்கு பின் ஹெலிகாப்டர் மூலம் ஆன்மீக சுற்றுலா சென்று உள்ள சமந்தா..!!! எங்கு சென்று உள்ளார் தெரியுமா..!!!

சமந்தா முதலில் திருமண நிகழ்ச்சியில் வெல்கம் கேர்ள் ஆக பணியாற்றி வந்த இவர் தமிழ் சினிமாவில் பானாகாத்தாடி மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தெலுங்கு படங்களிலும் நடித்து தனக்கு என்று பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கிறார். சமந்தாவிற்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுகுவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா சமீபத்தில் தான் சில வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார்.

சமந்தாவின் இந்த திடீர் முடிவை கேட்ட திரை உலக பிரபலங்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் சமந்தா விவாகரத்து பற்றி நிறைய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது சிலர் சமந்தா கவர்ச்சியாக நடித்ததால் தான் இந்த பிரிவு என்கிறார்கள் மற்றொரு பக்கம் சமந்தா சினிமாவில் பெரிய இடத்தில் இருப்பதால் சமந்தா அவருடைய கணவர் நாகசைதன்யா அவர்களுக்கும் சில ஈகோ பிரச்சனைகள் என்கிறார்கள்.

ஒரு சிலர் சமந்தா கர்ப்பமாகி குழந்தையை கலைத்து விட்டார் என்று கூறி வந்தனர். இந்த விஷயங்கள் சமந்தாவின் காதுக்கு செல்ல என்னைப்பற்றி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது நான் கர்ப்பமாக இருந்ததாகவும் குழந்தையை கலைத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள் விவாகரத்து என்பது கடினமான ஒன்று அதிலிருந்து மீண்டு வர எனக்கு கால அவகாசம் தேவை. தயவு செய்து இந்த கடினமான நேரத்தில் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கூறியிருந்தார்.

சமந்தா தற்போது மன அமைதிக்காக இமயமலைக்கு சென்று ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் இமயமலைக்கு சென்று அங்கு உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் சமந்தா. தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles