தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு தெலுங்கிலும் தமிழிலும் உண்டு.
சமந்தா நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் ஏன் திடீரென்று விவாகரத்து செய்து கொண்டார்கள் என்று ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.
சில பல கட்டுக்கதைகளை தொடர்ந்து வந்தது எதற்கும் எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்தார் சமந்தா. தற்பொழுது பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான Koffee with Karan என்ற நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் சமந்தா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் பல கேள்விகளை முன் வைத்தார்கள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண் ஜோகர் அப்போது சமந்தாவின் விவாகரத்து பற்றி கேட்டதற்கு சமந்தா அளித்த பதில் இதோ “நம்முடைய மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கைக்கு நாம் தான் முழுக்க முழுக்க காரணம் என்றும் நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை போது தான் வாழ்க்கை கடினமாக மாறியது.
நமக்கு அதிகமான எதிர்பார்ப்பு வாழ்க்கையில் இருந்தால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி அடையவில்லை என்றால் நம்மால் நம்முடைய வாழ்க்கை KGF போன்று கடினமானதாக மாறிவிடும் என்று கூறியுள்ளார் சமந்தா.
சமந்தாவின் இந்த பதிலை வைத்து பார்க்கையில் எதையோ அதிகமாக எதிர்ப்பார்த்து சமந்தா ஏமாந்தது போல இருந்தது.