சாய்பல்லவி ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கேரளத்தில் ரசிகர்கள் மட்டுமல்ல பிற மொழி ரசிகர்களையும் அந்த படத்தின் மூலமாக பெரிதாக கவர்ந்தவர்.
சாய் பல்லவி தமிழில் கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திரந்தார் அதனைத் தொடர்ந்து தாம்தூம் என்ற படத்தில் ஹீரோயினுக்கு சொந்தக்கார பெண்ணாக நடித்திருந்தார். 2015ஆம் ஆண்டு பிரேமம் என்ற படம் இவரை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது அதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வந்த சாய்பல்லவி தமிழில் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடலுக்கு அதிரடி நடனம் ஆடி ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்தார்.
அதனைத் தொடர்ந்து சூர்யாவின் என் ஜி கே படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளியான லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சினிமாவில் தன்னை எப்படி ஹீரோயினாக நிலை நிறுத்திக் கொண்டாரோ அதுபோல தனது தங்கையையும் சினிமாவில் ஹீரோயினாக பார்க்க வேண்டும் என்று நினைத்த சாய் பல்லவி நல்ல கதைகளை கேட்டு வந்தார் அப்போது சாய்பல்லவி தங்கைக்கு கூறப்பட்ட சித்திரை செவ்வானம் என்ற படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா கண்ணன் சமுத்திரக்கனியின் மகளாக நடித்திருக்கிறார். தனது மகளை டாக்டராக நினைக்கும் சமுத்திரக்கனி நன்றாக படிக்க வைத்து பிளஸ் டூவில் அதிக மார்க் வாங்க வைத்துவிடுகிறார். எம்பிபிஎஸ் ஆக வேண்டுமென்றால் நீட் தேர்வு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஹாஸ்டலில் தனது மகளை சேர்த்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராக சொல்கிறார் சமுத்திரக்கனி. ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பூஜா கண்ணனுக்கு சில வீடியோக்கள் செல்போனுக்கு வருகிறது அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூஜாவின் நிலை என்ன அதன் பின் என்ன ஆனது சமுத்திரக்கனி என்ன செய்தார் என்பதை சித்திரை செவ்வானம் படத்தின் கதை இந்த திரைப்படம் வருகின்ற 3ஆம் தேதி டிசம்பர் மாதம் ZEE5 OTT தளத்தில் வருகிறது.
படத்தின் ட்ரைலர் பார்க்கையில் முக்கியமான கருத்தை சமுத்திரக்கனி அவர்களை வைத்து பாபநாசம் பட ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்கள்.