Friday, May 17, 2024
-- Advertisement--

என்னை போன்றவரை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்த தம்பி விஜய்க்கு நன்றி – சகாயம் IAS..!!!

தமிழ்நாட்டில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களும் ஒருவர். லஞ்சம் ஒழித்து நெஞ்சை நிமிர்த்து என்று அதிரடியாக செயல்பட்டவர் தான் சகாயம் ஐஏஎஸ். இவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நற்பணிகள் செய்யவேண்டும் என்பது பல இளைஞர்களின் ஆசையாக இருந்தது.

இவரைப்போன்ற நேர்மையானவர்கள் அரசியலில் கால் எடுத்து வைத்தால்தான் வருங்காலத்தில் அரசியலில் புரட்சி ஏற்படும் என்று பல்வேறு தரப்பினர் சகாயம் ஐஏஎஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர். மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நம்பிக்கை கொண்ட சகாயம் ஐபிஎஸ் வருகின்ற தேர்தலில் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடவுள்ளார்.

சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு சகாயம் ஐஏஎஸ் அளித்த பேட்டியில் சர்கார் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் உங்களை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்களே அதைப் பற்றி கேள்விப்பட்டீர்களா என்று கேட்டதற்கு சர்கார் படத்தில் என்னை போன்ற பெயருடைய ஒரு நபரை சுட்டிக்காட்டி இவர்தான் தமிழகத்துக்கு முதல்வராக வேண்டும் என்பதைப்போல காட்சி வருகிறது என்று சொல்லப்பட்டது.

நான் பெரும்பாலும் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை எனவே அதன் பின்தான் நான் சர்கார் படத்தை பார்த்தேன் நானும் திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறேனே என்று சிறிய நிறைவு எனக்கு ஏற்பட்டது.

நான் முதலமைச்சர் கனவை கண்டதில்லை ஆனால் எனது நேர்மைக்கு அங்கீகாரம் கொடுத்து ஒரு திரைப்படத்தில் கொண்டு வருகிறார்கள் என்ற திருப்தி மனநிறைவு எனக்கு கிடைத்தது அந்த வகையிலே இந்தப் படத்தின் இயக்குனர் சகோதரர் முருகதாஸ் அவர்களுக்கும், இந்தப் படத்தின் கதாநாயகன் தம்பி விஜய் அவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி சகாயம் ஐஏஎஸ்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles