ரோஜா ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருந்தது.
ரோஜா ஒரு நல்ல நடிகையாக சாதித்தது மட்டுமல்லாமல் தன்னை ஒரு நல்ல அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டு ஆந்திர மக்களுக்கு பல சேவைகள் செய்து வருகிறார்.
தற்பொழுது நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரோஜா சிறப்பாக செயல்பட்டு ஆந்திர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளார். சில மாதங்களுக்கு முன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்த நாள் அன்று ஒரு பெண்ணை தத்து எடுத்து உள்ளார்.
அந்தப் பெண்ணின் படிப்பு செலவு மற்றும் அவர் வளர்ச்சிக்கான அனைத்து செலவையும் ரோஜா ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
மக்கள் பிரச்சனையை கேட்டு அறிந்து மக்களோடு மக்களாக சிறப்பாக சேவை செய்துவரும் ரோஜா நகரி தொகுதியில் நடந்த கபடி போட்டி ஒன்றை துவக்கி வைப்பதற்காக சென்றுள்ளார்.
கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றனர் மக்கள். குஷியான ரோஜா கபடி போட்டியை தொடங்கி வைத்த பிறகு களத்தில் இறங்கி இளைஞர்களுடன் கபடி ஆடி உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.