ரீமா சென் ஒரு நேரத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த மின்னலே என்ற படத்தில் ரீனா ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பெரிய பிரபலத்தை அடைந்தவர். குறிப்பாக மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகர பாடல் ரீமா சென்னுக்கு பெரிய பிரபலத்தை தேடி கொடுத்தது.
மின்னலே கொடுத்த வரவேற்பு ரீமா சென்னுக்கு அடுத்தடுத்து தமிழில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. விஷாலின் செல்லமே, விஜயின் பகவதி, விக்ரமின் தூள் படத்தில் நடித்து வந்த ரீமாசென் வல்லவன் திரை படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார் அதனைத் தொடர்ந்து ரெண்டு படத்தில் நடித்த ரீமா சென்னுக்கு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவர்ச்சியிலும் சரி நடிப்பிலும் சரி ரீமாசென் அசத்தி இருந்தார் சிவ் கரண் சிங்க் என்ற தொழிலதிபரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தனது நடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவர் மற்றும் குடும்பத்தை பார்த்து வந்தார் ரீமா. இரவு நேர பார்ட்டி செல்வது மற்றும் தனது நெருங்கிய தோழிகளை சந்திப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார் ரீமா சென்.
தற்பொழுது ரீமா சென்னுக்கு ருத்ர வீர் என்ற மகன் உள்ளார். ரீமா சென்னின் மகன் நன்றாக வளர்ந்து விட்டார். தனது மகனின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ரீமா சென்.
இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.