தமிழில் சின்னத்திரை நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரச்சிதா. மார்டன் உடைகளில் வந்தால் தான் அழகு என்ற எண்ணத்தை மாற்றி எளிமையாக வந்தாலே பேரழகு தான் என்பதை நிரூபித்தவர் ரச்சிதா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இன்றும் மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார் ரட்சிதா. ஆடம்பரம் இல்லாமல் பவ்யமான உடையில் எளிமையான மேக்கப்பில் என்றென்றும் ஜொலிப்பவர் ரட்சிதா.
சின்னத்திரையிலும் வெள்ளித்திரைக்கு கதாநாயகிக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருப்பது அது ஒரு சில நடிகைகள் தான் அதில் இவரும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மிர்ச்சி செந்தில் உடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார்.
மிர்ச்சி செந்தில் மற்றும் ரட்சிதா காம்போவை ரசிகர்கள் சரவணன் மீனாட்சி முதல் எதிர்பார்க்கப்பட்டன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார். சரவணன் மீனாட்சி பல சீசன்களில் இவரை ஹீரோயினாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து ரட்சிதாவும் அவருடைய கணவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் ஜோடியாக நடித்து இருந்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக அந்த தொடர் பாதியிலேயே முடிக்கப்பட்டது. ரட்சிதா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டு உள்ளார். தற்போது ரச்சிதாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.