Sunday, May 5, 2024
-- Advertisement--

ஆயுதப்படை காவலர் டூ டோக்கியோ ஒலிம்பிக் வரை – விவசாயி மகன் நாகநாத பாண்டி…!!!

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 5 தடகள நட்சத்திரங்கள் தகுதி பெற்றுள்ளனர். அதிலும் எளிமையான குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் அதிக உடல் வலிமை தேவைப்படும் தடகளத்தில் சாதித்து வருகின்றனர். வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ் (லால்குடி, திருச்சி) நாகநாதன் பாண்டி (சிங்கபுளியம்பட்டி, ராமநாதபுரம்) இருவரும் ஆடவர் 4×400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தனலட்சுமி சேகர் (குண்டூர், திருச்சி) ரேவதி வீரமணி (சக்கிமங்கலம், மதுரை) சுபா வெங்கடேசன் (திருச்சி) ஆகிய மூவரும் கலப்பு 4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிங்கபுளியம்பட்டியை சேர்ந்த விவசாயி பாண்டி- பஞ்சவர்ணம் தம்பதி மகன் நாகராஜன். பி.ஏ படித்த இவர் பள்ளிப்பருவ முதலில் கபடி, தடகளப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் காவல்துறை சார்பில் பங்கேற்று உள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 499 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். 2019ஆம் ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் கலப்பு 4×400 மீ கூட்டத்தில் இந்திய அணி இறுதி வரை சென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் இடம்பெற்றிருந்த நாகநாதன் டோக்கியோ ஒலிம்பிக் 4×400 மீ ரிலே ஓட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles