Saturday, May 18, 2024
-- Advertisement--

அண்ணாத்த படத்தின் சிறப்பு காட்சியை பேரனுடன் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…!!! திரையரங்கு வாசலில் காத்திருந்த சர்ப்ரைஸ்.

ரஜினிகாந்த் தன்னுடைய பேரன் ஆசையை நிறைவேற்றும் வகையில் அண்ணாத்த படத்தை பார்த்துள்ளனர். ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் அனைவருடன் இணைந்து அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சௌந்தர்யா விசாகன் அறிமுகப்படுத்தியுள்ள ஹூட் ஆப் மூலம் தகவலை தெரிவித்து உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிறப்பு காட்சியை பேரனுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தை பார்த்து உள்ளார். இதுகுறித்து ஹூட் ஆப் மூலம் அவர் கூறியுள்ளதாவது: அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே தன்னுடைய மூன்றாவது பேரன் வேத் ஆறு வயது ஆகிறது. படத்தை எப்போ காமிங்க தாத்தா, எப்போ பார்க்கலாம்.. எப்ப பார்க்கலாம்.. என ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பதினைந்து தடவையாவது கேட்பான்.

நான் இன்னும் ரெடியாகவில்லை என்று சொன்னால் ஏன் இன்னும் ரெடியாகவில்லை எப்போ பார்க்கலாம் என கேட்கும், அவனுக்காகவே இயக்குனர் சிவாவுக்கு போன் செய்து சார் கொஞ்சம் படத்தை சீக்கிரம் காமிங்க பேரன் தொல்லை தாங்க முடியல என்று கூறினேன். அவரும் நீங்கள் டெல்லி சென்று வந்ததும் படத்தை போட்டுக் காட்டுவதாக தெரிவித்தார். தன்னுடைய மற்ற இரு பேரன்களும் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கொடைக்கானலில் ஷட்டிங்கில் இருப்பதால் அவர்களிடம் சொல்ல வேண்டாம் என கூறிவிட்டார்.

மேலும் அக்டோபர் 26 ஆம் தேதி தன்னுடைய மகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், மனைவி லதா மற்றும் சம்மந்தி வணங்காமுடி அவரது மனைவி உஷா ஆகியோர் உடன் படத்தைப் பார்த்ததாகவும் குறிப்பாக பேரன் வேத் தன்னுடன் பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்தான் அவன் பார்க்கும் என்னுடைய முதல் படம் என்பதால் கண்டிப்பாக இது அவனுக்கு மறக்க மாட்டான் என்று கூறியுள்ளார். முழு படத்தையும் சுவாரஸ்யமாக பார்த்த வேத் படம் முடிந்த பின்னர் தன்னை கட்டி பிடித்து ஒரு 3 அல்லது 4 நிமிடம் விடவே இல்லை.

ரொம்ப சந்தோஷம் தாத்தா ஐ அம் சோ ஹேப்பி.. தேங்க்யூ சோ மச் என கூறியதாகவும் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். ரஜினிகாந்த் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக கலாநிதிமாறன் வாசலில் நின்று கொண்டிருந்தார். தன்னை பார்க்க வந்ததாக அவர் கூறியதாகவும் அவ்வளவு பெரிய மனுஷன் இவ்வளவு பிஸி அங்கு அவர் வரவேண்டிய அவசியமே இல்லை இருந்தாலும் வந்திருந்தார் மிகவும் சந்தோஷமாக இருந்தது என ரஜினிகாந்த் ஹூட் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles