ரஜினிகாந்த் புதுமுகமாக அறிமுகமாகி தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு சினிமாவில் பல சறுக்கல்களை சந்தித்து நிமிர்ந்து நின்று சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தான் ரஜினிகாந்த். இவரை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். தன் குருநாதர் பாலச்சந்தர் மீது அதிக அளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் ரஜினிகாந்த் அவர் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடக்கும் செல்லப் பிள்ளையாகவே இருந்தார்.
ஒரு நேரத்தில் ரஜினி அளவுக்கு மீறிய போதை பழக்கத்தில் அடிமையாக இருந்தாராம் அப்பொழுது அவருடைய மனைவி லதா அவர்களுக்கும் ரஜினிக்கும் அடிக்கடி சண்டைகள் வந்ததாம் வாக்குவாதம் முற்றிப்போய் விவாகரத்து வரை சென்றார்களாம்.
ரஜினி விவாகரத்து நோட்டீஸ் லதாவிற்கு அனுப்பிவிட்டாராம். அப்போது இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் ரஜினியை கூப்பிட்டு அட்வைஸ் செய்தாராம் இன்று நீ தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் உன் மேல மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது வசூலும் உன் படங்களுக்கு நன்றாக இருக்கிறது.
நான் அறிமுகப்படுத்திய உன்னுடைய நண்பன் கமல்ஹாசன் போல ஆக போகிறாயா தற்போது அவருக்கு இல்லற வாழ்க்கை அவருக்கு திருப்தி இல்லை அவரை சார்ந்தவர்களுக்கும் திருப்தி இல்லை அவருடைய பெண்கள் என்ன ஆகப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
தற்போது கமல்ஹாசனுக்கு பெண் ரசிகர்கள் கிடையாது மார்க்கெட் குறைந்துவிட்டது என்று எச்சரித்தார் கே பாலச்சந்தர். தனது குருநாதரின் அறிவுரையை கேட்ட ரஜினி சுதாரித்துக்கொண்டு விவாகரத்து முடிவை ரத்து செய்தாராம் ரஜினி, இதனை ஒரு பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.