Sunday, April 28, 2024
-- Advertisement--

இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகிறார் ரஜினி ..!!! ஓய்வு எடுக்க சொன்ன மருத்துவர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அண்ணாத்தபடத்தின் படப்பிடிப்பு தளத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டதால் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்துக்கு என்ன ஆனது என்று அவரது ரசிகர்கள் பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

முன்பு வெளியான அப்போலோ அறிக்கையில் ரஜினி அவர்களது ரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இல்லாததால் அதற்கான மருந்து கொடுத்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவரது உடல்நிலை குறித்து முடிவுகள் வந்த பின் தான் அவர் எப்பொழுது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூற முடியும் என்று கூறி இருந்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய இருப்பதாக அவரது அண்ணன் சத்தியநாராயணா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரஜினி அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி சென்னை செல்ல இருப்பதாகவும் கூறிய அவர். ரஜினியை மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள் அதனால் சென்னையில் சில நாட்கள் அவரது வீட்டில் ஓய்வு எடுத்தாக வேண்டும் என்றும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles