ஆலியா மானசா முதலில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியில் தனது காதலன் மான்ஸுடன் சேர்ந்து அவர் ஆடிய நடனம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பதற்காக வாய்ப்புத் தேடிய ஆலியா மானசாவிற்கு விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ராஜா ராணி தொடரில் சஞ்சீவ் என்பவருக்கு ஜோடியாக ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹோம்லியான இவரது நடிப்புக்கு சீரியல் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தார்கள். ஆலியா மானசா பிரபலமடையத் தொடங்கினார் நகைக்கடை விளம்பரம் முதல் ரியல் எஸ்டேட் விளம்பரம் வரை குவிந்தது. அலியாவிற்கும் அவரது காதலர் மான்ஸுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர்.
சின்னத்திரையில் தனக்கு கிடைத்திருக்கும் பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த ஆலியா மானசா தொடர்ந்து ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து வந்தார். அப்போது அந்த சீரியலில் ஆலியாவிற்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ஒரு சில காரணத்தினால் யாருக்கும் தெரியாமல் திடீரென்று திருமணத்தை செய்து கொண்டார்கள். தற்போது அலியாவிற்கு ஐலா என்ற அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
ஆலியா மானசா அடிக்கடி ஏதாவது இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்பொழுது தனது கணவனின் தம்பியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆலியா.
அதாவது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கணவரின் தம்பி VJ prathu என்பவருடன் ராஜா ராணி சூட்டிங் ஸ்பாட்டில் செம குத்தாட்டம் போட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.