ராஜா ராணி சீசன் 1 ல் சஞ்சீவ் ஆலியா ஜோடி நடித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ராஜா ராணி சீசன் 2வில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்தார். திருமணம் குழந்தைக்கு பிறகு மீண்டும் ராஜா ராணியில் நடித்த ஆலியாவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
ஆனால் அந்த சீரியலின் பட பாதியிலேயே ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் அவர் சீரியலை விட்டு விலகி விட்டார். தற்பொழுது ஆலியா மானசா சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி 2 வில் ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா விசுவநாதன் நடித்து வந்தார். தற்பொழுது இவருக்கு பதிலாக ஆஷா கௌடா என்ற புது ஹீரோயினை மாற்றியுள்ளனர்.
ஆயிஷா கவுடா ஏற்கனவே ஜீ தமிழ் வெளியான கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.