ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு செய்தல் அவசியம் என குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. அந்த துறையின் ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் பயோமெட்ரிக் திட்டம் மூலம் ரேஷன் பொருட்களை வாங்கும் நடைமுறையை பரீட்சார்த்த முறையில் திருச்சி ,அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு குடும்ப அட்டையில் உள்ள நபர்களை தவிர மற்ற நபர்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்ட பின்னரே அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.