நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வரும் 14ஆம் தேதி வெளிவர உள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதுகுறித்த மேல் முறையீடு குறித்து விசாரணைக்கு பின், சற்று முன் தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.
நடிகர் ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோ நடித்துள்ள திரைப்படம் ருத்ரன் இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ரெவென்சா குளோபல் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ருத்ரன் திரைப்படத்தை கதிரேசன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ருத்ரன் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தவிர இந்தி உட்பட வடமாநில மொழி மாற்றம் செய்து வெளியிட 5 ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம்.
அதன் அடிப்படையில் 12 கோடி 25 லட்சம் தர ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை எடுத்து 10 கோடியை முதலில் கொடுத்து விட்டோம். இதை எடுத்து 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் 4.5 கோடி கூடுதலாக தர வேண்டும் என்று கேட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதை எடுத்து இந்த நிறுவனத்தை சமரச தீர்வாணர் முன்பு கொண்டு சென்றோம்.
தற்போது சமரச தீர்வு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படத்தை வரும் 14ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் படம் வெளி வந்தால் எங்கள் நிறுவனம் கொடுத்த பத்து கோடி தொகையை வசூலிக்க முடியாமல் பெரும் இழப்பு ஏற்படும் எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ருத்ரன் திரைப்படத்தை வரும் 24ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் பதில் தருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
படத்தை குறித்த நேரத்தில் வெளியிடாவிட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தரப்பு நியாயத்தையும் படக்குழு எடுத்து கூறிய கூறப்பட்டது, தடையை நீக்கி சென்னை உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது. எனவே ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் படக்குழுவினரையும், ராகவா லாரன்ஸ் ரசிகர்களையும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.