ஜெய்பீம் உண்மை சம்பவத்தை எடுத்து ஊருக்கே தெரியப்படுத்திய சூர்யா அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் படம் மக்களின் மனதில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக உண்மை சம்பவத்தை எடுத்து தைரியமாக வெளி உலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல்.
இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளி வந்திருந்தால் இன்னும் பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கும் ஆனால் OTTதளத்தில் வெளியானது இருந்தாலும் இந்த படம் சேரவேண்டிய அனைவருக்கும் போய் சேர்ந்துள்ளது என்பதே உண்மை.
தற்பொழுது இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை தொலைபேசியில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது.
வலைப்பேச்சு ஜெபிஸ்மி அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்து கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளிக்கிறேன். ராசாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்கு கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.
இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வு இன்றைக்கு தமிழகம் முழுக்க பேச்சு பொருளாகிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும் ஜெய்பீம் படத்தை உரிமை கலைப்படைப்பாக மாற்றியதில் சூர்யா அவர்களுக்கும் திருமதி ஜோதிகா அவர்களுக்கும் இயக்குனர் திரு ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வலைப்பேச்சு என்ற யூடியூப் சேனலில் பிஸ்மி அவர்கள் பார்வதி அம்மாள் அவர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி கூறியிருந்தார் இதனை பார்த்த ராகவா லாரன்ஸ் தாமாக முன்வந்து பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டித் தருகிறேன் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.