ராதாரவி தமிழ் சினிமாவின் லெஜன்ட் எம் ஆர் ராதா அவர்களின் மகன் பல படங்களில் வில்லனாக தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனது தந்தையைப் போல ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்.
திமுகவில் இருந்த ராதாரவி ஸ்ரீ ராம ஜெயம் என்ற படத்தில் நயன்தாரா நடித்தது பற்றி சர்ச்சையான கருத்தை கூறியதால் கட்சியை விட்டு தூக்கினார்கள். அதன் பின் தன்னை பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராதாரவி. தொடர்ந்து இசை வெளியீட்டு விழா அல்லது ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் ராதாரவி மேடையில் ஏதாவது பேசிவிட்டுப் போவார் அவர் பேசிய பின்பு அவருடைய பேச்சு சர்ச்சை ஆவது வழக்கம்.
சமீபத்தில் கனல் என்ற படத்தில் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட ராதாரவி அவர்கள் கனல் படத்தில் நடித்த ஹீரோயினை பற்றி பேசிக்கொண்டு இருந்தார் அப்போது அந்தப் பொண்ணு செக்கச் செவன்னு இருந்துச்சியா சமந்தாவா சமந்தா இல்ல யாரு தமன்னா ஒரு நாள் ஏர்போர்ட்ல பார்த்தேன்.
இந்த தமன்னாவை பார்த்து பயந்துட்டேன் ஒரு பக்கம் கூட கருப்பு இல்லை யா நானும் சுத்தி சுத்தி தேடிப்பார்த்தேன் ஏர்போர்ட்ல நின்னுது வணக்கம் சார்னு சொல்லுச்சு நான் சுத்தி சுத்தி பார்க்கிறேன் எங்கேயாவது ஒரு இடத்துல கருப்பு இருக்கானு தேடி பார்த்தேன் செக்கச் செவன்னு இருந்துச்சு என்று தமன்னாவை வர்ணித்த அவர் கனல் படத்தின் ஹீரோயின் செக்கச் செவன்னு இருந்துச்சு ஏதோ கிளாமர் பண்ணும் என்று நினைத்தேன் ஆனா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கு அந்த பொண்ணு என்று கனல் படத்தின் ஹீரோயினை பாராட்டினார்.
தமன்னா ஒரு பக்கம் கூட கருப்பு இல்லை என்று ராதாரவி கூறியது சமூக ஊடகங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது வெள்ளையானவர்கள் தான் நடிகையா கருப்பாக இருந்தால் நடிகையாக முடியாதா என்று பல ஆதாரவீதம் கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.