Monday, May 13, 2024
-- Advertisement--

சூர்யாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் பிரபல நடிகர் பேச்சால் பரபரப்பு.

நடிகர் சூர்யா சமீபகாலமாக பொது விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய கருத்தை தெரிவித்திருந்தார். பல மாணவ மாணவியரை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் சூர்யாவை பார்த்து கல்வியை பற்றி என்ன தெரியும் என்றும் கேட்டார்கள். சூர்யாவை எவ்வளவு மோசமாக பேச முடியுமோ சமூக வலைத்தளத்தில் பேசத்தொடங்கினார்கள் ஒரு சில கட்சியினரும் பிரபலங்களும். குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் சூர்யாவை கண்டபடி திட்டியும் வந்தனர்.

பாஜகவின துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சூர்யா நல்ல மனிதர் நல்ல நடிகர். நீட் தேர்வு குறித்து அவரது மனநிலை தேர்வு முடிவுகள் வந்தவுடன் மாறலாம் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது பிரபல நடிகர் ராதாரவி சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார். நீட் தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா அடிப்படை என்ன என்பது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் முழு விவரங்கள் தெரியாமல் இதுபோன்று பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ராதாரவி. ராதாரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சினி வட்டாரத்தில்.

ராதாரவி சமீபத்தில் பாஜகவில் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles