புனித் ராஜ்குமார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமார் மரணச் செய்தியை கேட்டவுடன் கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமே அதிர்ந்தது. அந்த அளவிற்கு அனைவரிடமும் அன்பாக பழகி உள்ளார் மனிதர்.
புனித் ராஜ்குமார் அவர்கள் இறந்த செய்தி கேட்டவுடன் மருத்துவமனையில் குவிய ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். அப்பு அப்பு என்ற கோஷம் எழுப்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்கள்.
ஒரு நடிகர் மீது அளவில்லாத அன்பை ரசிகர்கள் இப்படி வெளிப்படுத்துகிறார்கள் அப்படி என்ன செய்துவிட்டார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வெளிவந்தது அவர் செய்த நன்மைகள்.
புனித் ராஜ்குமார் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கூட சொல்லிக் கொள்ளாமல் பல நல்ல விஷயங்களை சத்தமில்லாமல் செய்துள்ளார். குறிப்பாக நூற்றுக்கணக்கான மாணவர்களை படிக்க வைத்ததோடு தனது சொந்த செலவில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வந்திருக்கிறார். கோசாலை வைத்து பல மாடுகளை பாதுகாத்து உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தன்னுடைய கண்ணை தானம் செய்ய எழுதிக் கொடுத்துள்ளார். புனித் இறந்த பின் அவரது கண்களை எடுத்து சென்ற மருத்துவர்கள் 4 இளைஞர்களுக்கு பார்வையும் கொடுத்துள்ளார். மனிதர் வாழும் போது மட்டும் உதவி செய்யவில்லை இறந்த பின்னும் பிறருக்கு உதவி செய்து இருக்கிறார்.
புனித் அவர்கள் கடைசியாக நடித்து முடித்த ஜேம்ஸ் திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது. டீசரில் புனித் ராஜ்குமார் அவர்களின் குரலுக்கு பதிலாக அவருடைய அண்ணன் சிவா ராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளார். படத்தில் புனித் வரும் காட்சிகளுக்கு அவரது அண்ணன் சிவா அவர்கள் தான் டப்பிங் பேசி உள்ளதாக தகவல். கடைசி படத்தில் புனித்தின் குரல் ஒலிக்கவில்லையே என்ற கவலையில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள்.
அதனை பார்க்கையில் இந்த மனிதனுக்கு ஏன் மரணம் முன்பே வந்தது இன்னும் வாழ்ந்து இருக்கலாமே என்று பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.