கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ராஜ்குமார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருமே திரை உலகில் இருந்து வருகின்றனர். அதில் இரண்டாவது மகன் சிவராஜ்குமார் மற்றும் கடைசி மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவருமே திரை உலகில் மாபெரும் நடிகர்களாக உள்ளனர்.
அப்போது அவரின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் மருத்துவர்கள் இசிஜி போன்ற சோதனைகளை மேற்கொண்டனர். அதில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வெளியே புனித் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.
அதோடு பெங்களூரு பல பகுதிகளிலும் மைசூரு உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே மருத்துவமனையில் இருந்து நேற்று 2.30 மணி அளவில் புனித் ராஜ்குமார் காலமானார் செய்தி அறிவிக்கப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களுருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செய்து வருகின்றனர். புனீத்தின் மகள் அமெரிக்காவில் இருந்து தந்தையை இறுதியாக காண தற்போது பெங்களூரு வந்தடைந்தார். இறுதியை தந்தையை தெட்டு கண்ணீர் வடித்த காட்சி அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#PuneethRajkumar Daughter 💔 pic.twitter.com/hmlEjVjhFF
— 🟣 Basheer Ahamed (@KombaiBasheer) October 30, 2021