Monday, May 6, 2024
-- Advertisement--

தாய்ப் பாலை தானம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..!!

ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் தாய்ப்பால் என்பது தான் முதல் ஆகாரமே. மிகவும் சத்தான ஆகாரம். பலரும் தாய்ப்பால் கொடுப்பதை தற்பொழுது வலியுறுத்தி வருகின்றனர்.

தாய்ப்பால் முக்கியத்துவத்தையும் அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நற்பலன்களையும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பிரபல தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிராநந்தானி. இவர் டாப்ஸி, பூமி பட்னெகர் ஆகியோர் நடித்த சாந்த் கி ஆங் என்ற படத்தை அனுரக் காஷ்யக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார்.

‘இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆன் குழந்தை ஒன்று பிறந்தது.எனவே தனது குழந்தைக்கு தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை வீண் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை படி அதை தானம் கொடுத்துள்ளார்.

மேலும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு குறிப்பிட்டளவு தாய்ப் பாலை தானம் கொடுத்துள்ளார். இதுவரை அவர் 42 லிட்டர் அளவு தாய்ப் பாலை தானம் கொடுத்துள்ளார். இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles