Sunday, May 19, 2024
-- Advertisement--

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா விவாகரத்து செய்தியை அறிவித்த பயில்வான் ரெங்கநாதன்..!!! பயில்வான் மீது கோபத்தில் ரசிகர்கள்.

பிரியங்கா தேஷ்பாண்டே (வயது 31) விஜய் டிவியில் திவ்யதர்ஷினி என்கிற டிடி போல கலகலப்பான ஒரு தொகுப்பாளினி என்றால் கண்டிப்பாக அது பிரியங்காவை சொல்லலாம் காரணம் இவர் தொகுத்து வழங்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் குறும்புத்தனமான சேட்டைகள் செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்.

சுவாரசியமாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்லும் பல்ஸ் தெரிந்தவர் பிரியங்கா அதனால் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா, கலக்கல் ராணி என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒரு வெற்றி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பிரியங்கா தொடர்ந்து தொகுப்பாளினியாக பயணித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர்.

பிரியங்கா விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்த பிரவீன் குமார் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் பிரியங்கா கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெளிவந்தார்.

தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. பயில்வான் ரங்கநாதன் அவர்கள் கூறியது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்த பெண்கள் பலர் தங்களுடைய விவாகரத்து பற்றி சொல்லவே இல்லை பிக்பாஸ் பிரியங்கா ஏற்கனவே திருமணமானவர் பிரியங்காவின் கணவர் ஒரு தொலைக்காட்சியில் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆக இருக்கிறார் அவர் பெயர் பிரவீன்குமார். பிரவீன் குமாரால் தான் அடையாளம் காட்டப்பட்டார் பிரியங்கா அதனால் தான் அவர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வர முடிந்தது இதனால் நன்றிக்கடனாக பிரவீன் குமாரை கணவனாக ஏற்றுக் கொண்டார்.

இருவரும் சிலகாலம் சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள் ஆனால் பிரவீன் குமாரை விட வருமானமும் புகழும் பிரியங்காவுக்கு அதிகரித்தது இதனால் கொஞ்சம் அகந்தை ஏற்பட்டதும் உண்மைதான் இதனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த பல மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள் இந்தச் சூழ்நிலையில் விஜய் டிவியில் வந்த அழைப்பை ஏற்று பிக்பாஸில் கலந்து கொண்டார் பிரியங்கா அங்கும் கணவரை பற்றி எதுவும் சொல்லவில்லை . பிரியங்கா RUNNER ஆக தேர்வு பெற்றார்.

பிக்பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு பல நடிகர்கள் அவரைப்போய் வாழ்த்தினார்கள் ஆனால் தாய் வீட்டில் தான் இருந்தார் பிரியங்கா கணவர் பிரவீன் குமார் வீட்டுக்கு செல்லவே இல்லை இதனால் பல பிரியங்காவின் ஆர்வலர்கள் பிரியங்கா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் குடும்ப கோர்ட்டில் அந்த வழக்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள் என்று ஒரு YOUTUBE சேனல்லில் தெரிவித்து இருந்தார்.

இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து ப்ரியங்காவிற்கு என்ன ஆச்சி ஏன் இந்த திடீர் முடிவு என்று வருத்தப்பட்டு வருகிறார்கள் ஆனால் இதுவரை பிரியங்கா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

தேவை இல்லாமல் அடுத்தவர்கள் பிரச்சனைக்குள் நுழையாதீர்கள் என்று பயில்வான் ரெங்கநாதனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles