சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிபெற்ற கதாநாயகிகளில் பிரியா பவானி சங்கர் ஒருவர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து அதன்பின் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவர் பிரியா.
பெரிய ஹீரோயினை வைத்து படம் எடுப்பதினால் பட்ஜெட் தான் அதிகமாகும் அதற்கு இதுபோன்ற பிரபலமான புதுவரவுகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் சம்பளமும் குறைவாக கொடுக்கலாம் அதேநேரத்தில் படத்திற்கும் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நோக்கத்தில் தற்பொழுது புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள் அந்தவகையில் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது அசோக் செல்வன் உடன் ஹாஸ்டல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆண்கள் வசிக்கும் விடுதியில் ஒரு பெண் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல இருக்கிறார்களாம்.
அடிக்கடி சமூகவலைத்தளம் வாயிலாக ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா ஏதாவது புகைப்படங்களை எடுத்து போடுவார் அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும். அந்தவகையில் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும்படி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் பிரியா.