என்னது வைகைப்புயல் வடிவேல் அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரா.
பிரியா பவானி சங்கர் முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார் அவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியலில் பிரியாவின் ஹோம்லியான நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தார்கள். ப்ரியாவின் முகபாவனைகள் க்யூட்டாக இருக்கும் ரசிகர்களும் அடிக்கடி இவரிடம் எப்பொழுது சினிமாவில் நடிப்பிங்க என்று கேட்டு வந்தார்கள் முதலில் சின்னத்திரையில் மட்டும் ஆர்வம் காட்டிய பிரியா பவானி சங்கர் மேயாத மான் என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் முதல் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார் எஸ் ஜே சூர்யா படம் ஏடாகூடமாக இருக்கும் வேண்டாம் என்று பிரியாவிடம் பலர் கூறியும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் மான்ஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் அந்தப் படம் வெற்றிப்படமாக இவருக்கு அமைந்தது அதுபோல கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைய பெரிய ஹீரோயினை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பார்வை பிரியா பவானி சங்கர் மீது திரும்பியது.
துட்டும் கம்மி நன்றாகவும் நடிக்கிறார் இது தானே வேணும் தயாரிப்பாளர்களுக்கு. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியா கமல்ஹாசனுடன் இந்தியன் படத்திலும் நடித்திருந்தார் ஒரு சில பிரச்சனைகள் காரணத்தால் அந்தப் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இன்று வைகைபுயல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்கள் ஒரு பக்கம் தெரிவித்துக் கொண்டிருக்க பிரியா பவானி சங்கர் மற்றும் வடிவேலு சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது பார்த்த ரசிகர்கள் வடிவேல் எலி படத்தின் கெட்டப்பில் இருக்கிறார் ஒருவேளை எலி பார்ட் 2 எடுக்க போறாங்களோ என்று கேட்க தொடங்கினார். வடிவேலுக்கு ஜோடியாக பிரியா நடிக்கிறார் என்று வாழ்த்தும் தெரிவித்து வந்தனர்.
கடைசியில் தான் தெரிந்தது அது பிரியா பவானி சங்கர் வடிவேலு புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று இதனை பார்த்த பிரியா பவானி சங்கர் அதனை இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.