தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றி வாகை சூடிய முதல் நடிகை.
சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோர் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் தற்போது கலக்கி வருகின்றனர். அதுபோல பிரியா பவானி சங்கர்செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிகர் வைபவ் உடன் மேயாதமான் என்ற படத்தில் நடித்த முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மக்கள் மத்தியில் ஒரு நல்லதொரு இடத்தைப் பிடித்தார் பிரியா பவானி சங்கர். அதனைத் தொடர்ந்து இவருக்கு மாபியா, பொம்மை, கடை குட்டி சிங்கம் போன்ற பல பட வாய்ப்புகள் வந்தன.
இதனைத் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கருக்கு என்று இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலும் பிரிய பவனி சங்கர் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவரது புகைப்படங்களும் அது போலவே இருக்கும். ஆனால் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்து பிரியா பவானி சங்கரா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.