பிரியா பவானி சங்கர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போது இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதற்குப்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்.
ப்ரியாவிற்காகவே அந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் ஏராளம் அந்த அளவிற்கு ஹோம்லியான தோற்றத்துடன் அனைவரையும் கவர்ந்தார் பிரியா பவானி சங்கர்.
அந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் அது சரியான கதை அமைந்தால் தான் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும் என்று நன்றாக தெரிந்து கொண்ட பிரியா மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார். மேயாத மான் இளைஞர்களை கவர்ந்தாலும் அந்தப் படம் வெளியானபோது தளபதி விஜயின் மெர்சல் வெளியானதால் மேயாதமான் பெரிதாக ரசிக்கவில்லை ரசிகர்கள்.
இருந்தாலும் அந்தப் படம் கொடுத்த வரவேற்பு ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தது. எஸ் ஜே சூர்யா அவர்களுடன் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் பெரிய வரவேற்பை பெற்றது. பிரியா பவானி சங்கர் நடித்து வெளிவரும் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் பிரியா பவானி சங்கர் சிபாரிசு செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு பெரிய கதாநாயகியை வைத்து படமெடுத்தால் கோடிகள் செலவாகும் அதற்கு பதில் இது போல ஒரு நல்ல புது முக நடிகைகளை வைத்து படம் எடுத்தால் அந்தப் படத்தையும் நன்றாக எடுக்கலாம் பட்ஜெட்டும் குறையும் என்று நன்றாக புரிந்து கொண்ட தயாரிப்பு தரப்பு பிரியா பவானி சங்கர் தொடர்ந்து அணுகி பட வாய்ப்புகள் கொடுத்து வந்தனர்.
சமீபத்தில் பிரியா பவானி சங்கர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக யானை படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரைலரில் ப்ரியா பவானி சங்கருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. யானை திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்கள் ரசிக்கும் படமாக அமையும் என்று உறுதியாக இருக்கிறது படக்குழுவினர்.
இந்நிலையில் பிரிய பவனி சங்கர் யானை படத்திற்கான பிரமோஷன் ஆரம்பித்துவிட்டார். கவர்ச்சி காட்டினால் தான் ஹீரோயினா ஹோம்லியான உடை அணிந்தும் ரசிகர்களை கவரலாம் என்று சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.