முதலில் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிந்த பிரியா பவானி சங்கர் அவர்கள் பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியல் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியது.
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா வெள்ளித்திரைக்கு வைபவ்வின் மேயாத மான் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படம் தளபதி விஜயின் மெர்சல் திரைப்படத்துடன் வெளியானதால் அந்த படம் வெளிவந்ததே தெரியாமல் போனது.
அதன் பிறகு SJ சூர்யாவுடன் மான்ஸ்டர், ஹரிஷ் கல்யாணுடன் ஓமன பெண்ணே, அசோக் செல்வனுடன் ஹாஸ்டல், கவுதம் கார்த்தி சிம்புவுடன் பத்து தல போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
டாப் கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்பதாலும், ஏற்கனவே படங்களில் கமிட் ஆகி தேதி கொடுக்கமுடியாமல் போனதாலும் பல படங்கள் பிரியாவிற்கு தான் வந்து உள்ளது. ப்ரியாவின் சம்பள விஷயங்கள் கொஞ்சம் நியமன இருப்பதால் தயாரிப்பாளர்கள் ப்ரியாவை சிபாரிசு செய்கிறார்கள்.
ஷூட்டிங் தவிர பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து வரும் பிரியா. CANCERக்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்கவும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் APOLLO CANCER CENTRE சார்பில் கொண்டாடப்பட்ட உலக ரோஜா தின நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய பிரியா,” தன் தாய்க்கும் கேன்சர் இருப்பதாகவும், இந்த நோய் குணப்படுத்த முடியும் என்றும் கேன்சர் இருக்கும் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அதிலிருந்து மீண்டு வர முடியும்” என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தன் தாய் இப்பொழுது தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.