பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு ஹோம்லியான நடிகை. ஒரு செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலமாக இளைஞர்களின் மனதை கவர்ந்தவர். பிரியாவின் முகபாவனைகளை பார்க்கவே அந்த சீரியலை பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் “மேயாத மான்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேயாதமான் படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் பிரியாவை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக மாறினார். SJ சூர்யா படம் என்றால் சில நடிகைகள் பயந்து ஒதுங்கும் இந்த காலத்தில் தைரியமாக அவருடன் “மான்ஸ்டர்” என்ற படத்தில் அருமையாக நடித்திருந்தார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த “மாஃபியா” படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.
இதையும் படிங்க : செம்ம சூப்பராக நடனம் ஆடி ரசிகர்களின் பாராட்டை பெற்ற ஆர்யா மனைவி சாயீஷா..! வீடியோ உள்ளே..!
தொடர்ந்து சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர். பிரியாவின் தாயின் பிறந்த நாளை முன்னிட்டு தனது அன்புத் தாயை செல்ல கடி கடித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுக்குன்னு அம்மா மேல இவ்வளவு பாசமா கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.