சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் என்ற உடனே ரசிகர்கள் நேற்று இரவு 12 மணி அளவில் அவரது வீட்டுக்கு வெளியே கேக் வெட்டி கொண்டாடி வந்தனர். இந்த பிறந்தநாள் ரஜினியின் எழுபதாவது பிறந்த நாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் பல இடங்களில் அன்னதானங்கள் செய்து வருகின்றன அதுமட்டுமல்லாமல் கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் அரசியல் பற்றி சற்று யோசித்த ரஜினியை அனைவரும் விமர்சிக்கத் தொடங்கினார். ரஜினி சொல்லுவாரு ஆனா அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறிவந்தனர் ஆனால் ரஜினி சில நாட்களிலேயே தன் அரசியல் வருகையை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மட்டும் இப்போது வரவில்லை என்றால் எப்போதும் வராது என்று கூறியிருந்தார். இந்த செய்தி கேட்டவுடன் ரஜினி ரசிகர்கள் சந்தோசத்தில் ரஜினியை கொண்டாட ஆரம்பித்தனர்.
தற்பொழுது ரஜினியின் எழுபதாவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள் இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினிகாந்த் அவர்களுக்கு ட்விட்டரில் தனது வாழ்த்தினை தெரிவித்தார் அதில் நீண்ட ஆயுளுடன் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்று மோடி கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்தினை தெரிவித்தார் அதில் தனது அயராத உழைப்பாலும் திறமையாலும் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.