இந்தியாவின் ஜனாதிபதியாக 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் பணியில் இருந்த போது மக்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார். இவர் சமிபாத்தில் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு மூளை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சோதனையில்அவருக்குக் பாஸிடிவ் என முடிவு வந்துள்ளது. இதனால் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரு நாட்கள் கடந்துல்ல நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு வெண்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் அவர் கோமா நிலையை தாண்டவில்லை என சொல்லப்படுகிறது.